நம் முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறைக்கும் தற்பொழுது இருக்கும் வாழ்க்கை முறைக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் நிறைந்துள்ளது. நம் முன்னோர் காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலோ கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனியம் இது போன்றவை தான் முதலில் மனதிற்கு தோன்றும்.
வாழ்க்கையில் ஏற்படும் தடங்கள் முதல் உடல்நிலை பாதிக்கப்படுவது என அனைத்து கெட்ட விஷயங்களுக்குமே யாரேனும் கெட்ட சக்தியை ஏவி விட்டதாகவும் பில்லி சூனியம் வைத்து விட்டதாகவும் தான் எண்ணம் தோன்றும். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் சில பரிகாரங்களும் உள்ளது அதை செய்வதன் மூலம் நம் மனதிற்கு முழு நம்பிக்கை கிடைக்கிறது.
எவ்வளவு பெருசாக ஒரு மண் விளக்கு செய்ய முடியுமோ அந்த அளவிற்கு ஒரு மண் விளக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மண் விளக்கில் நெய் ஊற்றி கிழக்கு முகமாக வைத்து தீபத்தை தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை வாசலில் வைக்கும் பொழுது பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளில் இருந்து விடுபட உதவும்.