பொதுவாகவே வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும் மறைமுகமாக சில பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கண் திஷ்டி முக்கிய காரணமாக இருக்கும். கண் திருஷ்டியானது ஒருவர் வாழ்க்கையில் எப்படி வேணாலும் புரட்டி போடும். கண் திருஷ்டி ஏற்பட்டால் செல்வம், உடல் ஆரோக்கியம் என எல்லா விதத்திலும் அதன் தாக்கம் ஏற்படும்.
ஆன்மீக ரீதியாக கண் திருஷ்டியை மிக எளிய முறையில் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நாம் முக்கிய பொருளாக எடுத்துக் கொள்வது என்னவென்றால் ஜாதிக்காய் தான்.
ஒரு பாத்திரத்தில் ஜாதிக்காயை போட்டு கல்லுப்பைக் கொண்டு நிரப்ப வேண்டும். ஜாதிக்காய் தெரியாத அளவிற்கு கல் உப்பை நிரப்ப வேண்டும். அதன் மேல் 5 மிளகு போட வேண்டும். இந்த பாத்திரத்தை வீட்டிற்கு முன் பகுதியில் வைப்பது மிகவும் அவசியம். பொதுவாகவே அனைவர் கண்களிலும் படும்படி இந்த பாத்திரத்தை வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஆனது நிவர்த்தி ஆகும்.