Home ஆரோக்கியம் செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

122
0

நல்ல குணங்கள் கொண்டது செவ்வாழை இதில் கால்சியம் மக்னீஷியம்,, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின் என்று பல உள்ளது . இது இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்க உதவும் . மூளையின் செயல்பாடு , சீரான ரத்த ஓட்டம் , ரத்த உற்பத்தி குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.

விளம்பரம்

செவ்வாழை சாபிடுவதற்கென சில நேரம் உள்ளது. காலை 6 மணிக்கு சாப்பிடுவது உடலுக்கு நல்ல ஆரோகியத்தை தரும். அல்லது காலை சாப்பிட முடியவில்லை என்றால் பகல் 11 மணியளவில் எடுத்துக்கொள்ளலாம். பிறகு மாலை 4 மணி அளவில் எடுத்துக்கொள்ளலாம். சாப்பிட உடனேயே செவ்வாழை பழத்தை எடுத்துக்கொண்டால் அதன் முழு சத்தும் நமக்கு கிடைக்காது . அதுமட்டுமின்றி இது செவ்வாழை பழத்திற்கு மட்டுமில்லாமல் அணைத்திக்கும் சேரும். சாதரணமாகவேஆண்களுக்கு நல்லது என்று கூறுவார்கள்.

அந்த வகையில் ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாக உள்ளது . இதை தொடருந்து 21 நாள் என்ற விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும் . மாலைகண் நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. சருமம் மற்றும் தோள் சார்ந்த பிரச்சனைகளுக்கு செவ்வாழை நல்ல தீர்வை தருகிறது. தொடர்ந்து 7 நாள் என்ற விதத்தில் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக முழு பலனையும் அனுபவிக்கலாம்.

விளம்பரம்
Previous articleகீரைகளில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்…! 
Next articleஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்…!